வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் கிராமத்தில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து காதலியின் பெற்றோரிடம் விஜயகுமார் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகுமாருக்கு பெண் கொடுக்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்து விஜயகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.