Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற பேத்திகள்…. விடுமுறைக்கு வந்த போது நடந்த விபரீதம்…. சேலத்தில் பரபரப்பு…!!

ஆற்று தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சேத்துக்குளி பகுதியில் பாப்பாத்தி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுச்செல்வன், அன்புச்செல்வன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அறிவுச்செல்வனுக்கு 11 வயதுடைய சுசித்ரா என்ற மகளும், அன்புச் செல்வனுக்கு 6 வயதுடைய சசிரேகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை ஒட்டி சிறுமிகள் இரண்டு பேரும் சேர்த்துக்குளியில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று பாப்பாத்தி அம்மாள் தனது பேத்திகளுடன் காவிரி ஆற்றில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகள் இரண்டு பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி அம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பேத்திகளை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடல்களை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |