Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்காவின் கழுத்தை அறுத்த தம்பி…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார்.

இதனால் செல்வநாயகி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த செல்லமுத்து தனது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வநாயை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |