Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. இப்படி ஒரு நோயா…? பெற்றோரின் கண்ணீருக்கு அரசு பதில் தருமா…?

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் செயலாளராக பணிபுரிகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி கிராமமாகும். இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை  திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இந்த  நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யாதேவி என்ற மகளும், பொன்குமரன் என்று மகனும்  இருக்கின்றனர். இதில் பொன்குமரன் பிறக்கும்போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்திருக்கிறான். மேலும் தலை கால் வரை தோலானது தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும்.

இந்நோய் காரணமாக உடல் சத்து குறைபாடு இருப்பதால் 8 வயதிலும் 3 வயது சிறுவன் போன்ற உடல் வளர்ச்சி தான் இருக்கின்றது. மேலும் தனியாக நடமாட முடியாமல் அந்த சிறுவன் இருக்கின்றான். பொன்குமரன் பெற்றோர்கள் பிறந்ததிலிருந்து அவனது தோல் நோய் சரியாக வேண்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் மருத்துவர்களும் பொன்குமரன் பாதிப்பு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயுர்வேதம், சித்தா என அனைத்தும் மருத்துவ முறைகளை முயன்று பார்த்தவர்கள் பொன்குமரன் குணமடைய கோவில்களுக்கும் சென்று வந்துள்ளனர். இருந்தபோதிலும் இந்த தோல் நோய் குணமாகவில்லை இதுபற்றி பொன் குமரன் தந்தை பேசும்போதும் பொன்குமரன் பிறந்த போதே தோல் நோய் பாதிப்பு இருப்பதாகவும் தோலானது தொடர்ந்து உதிர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த காரணத்தினால் தனது மனைவி உடனிருந்து கவனிக்க வேண்டிய காரணத்தினால்தான் மட்டும் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழ்நிலை நிலவுவதாகவும் அதிலும்  மருத்துவத்திற்கு பெரும்பகுதி செலவாகி விடுகிறது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி மருத்துவ செலவுகள் செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கோடை காலம் வந்து விட்டால் தோல் வறண்டு உதிர்வதால் அவனது உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதால் இரவு முழுவதும் விழித்திருந்து உடலை தடவியும் எண்ணை தேய்த்துக் கொண்டும் பராமரிக்க  வேண்டும்.  நன்றாக படிக்கும் திறன் இருந்தும் பள்ளி சென்றால் உடல் உபாதைகளுக்கு தனியாக செல்ல முடியாத காரணத்தினால் வீட்டிலேயே வைத்து பார்த்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

மேலும் பொன்குமரனுக்கு  சிறந்த மருத்துவம் அளிக்க தமிழக அரசு உதவ  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தங்களது மகன் என்னவென்று அறிந்து கொள்ள முடியாத தோல் நோயினால் பாதிக்கப்பட்டு அவன் படும் வேதனையை பார்க்க முடியாமல் ஏழைப் பெற்றோர் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தங்கள் மகன் மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் உள்ள இவர்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |