அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்க அரசு தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.
அதே சமயத்தில் பயணிகள், பயணத்திற்கு முன்பு செய்து கொண்ட கொரோனா பாதிப்பு இல்லை என்னும் சான்றிதழை பயணம் மேற்கொள்ளும் முன் சமர்பிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் துணை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.