Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது”….. அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை….!!!!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

தமிழகம் முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  பள்ளிகள் திறக்கும் போது பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |