Categories
உலக செய்திகள்

“இதை செய்தால் நிச்சயம் போர் தொடுப்போம்…. சீனாவின் பகிரங்க எச்சரிக்கை….!!

சிங்கப்பூர் நாட்டில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் தைவான் பிரச்சினையை பற்றி விவாதித்துள்ளனர். இந்நிலையில் தைவான்  நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், “தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறோம். மேலும் தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போா் தொடுக்க சீனா தயங்காது” என அவா் எச்சரித்துள்ளார். மேலும் தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதிசெய்யும் என அவா் சபதம் செய்துள்ளார்.

Categories

Tech |