Categories
மாநில செய்திகள்

என்.எஸ்.சி. போஸ் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு…. இவர்களும் ஆஜராக வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி 2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாற்று இடம் வழங்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனை மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அவகாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து ஜூன் 23-ம் தேதிக்குள் மாற்றிடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் , அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும்போது பணியில் இருந்து தலைமை செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் அதே பொறுப்பில் தற்போது இருப்பவர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |