மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த 2-ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்தது. மேலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 81,000 பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும் பிப்ரவரி மாதத்தில் இதில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 1.13 லட்சமாக அதிகரித்தது.
இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்ச பயணிகள் மற்றும் மே மாதத்தில் 1.59 லட்ச பயணிகள் வரையிலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மற்ற நாட்களை விடவும், வாரத்தின் இறுதி நாட்களில், அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறையின் காரணமாக அதிகமானோர் வெளியூர் சென்று வருவதால் சென்னை மெட்ரோ ரயிலில் 1.3 லட்ச பயணிகள் வரைக்கும் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கேற்ப, 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்துகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது இயக்கி வருகிறது. மேலும் இன்னும் கூடுதலாகவும் 5-வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அரசினர் தோட்டம் மெட்ரோ முதல் தலைமை செயலகம் வரைக்கும், கிண்டி மெட்ரோ முதல் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் வரைக்கும், சின்னமலை மெட்ரோ முதல் தரமணி வரைக்கும், செனாய் நகர் மெட்ரோ முதல் தி.நகர் பேருந்து நிலையம் வரைக்கும் மற்றும் விமானம் நிலையம் மெட்ரோ முதல் தாம்பரம் மேற்கு ஆகிய 5-வழித்தடங்களில்,இன்னும் கூடுதலாக 2-சிற்றுந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இன்னும் கூடுதலாக சிற்றுந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.