Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுல என்ன இருக்கு…? அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…!!!!!!!

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மேட்டூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் கடந்த  மாதம்  7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு  லாரியில் கடத்தி செல்ல முயற்சி செய்துள்ளார். வேலூர் கோட்டை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச்சாவடி அருகே ரேசன் அரிசியுடன் மடக்கி பிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் மணிகண்டனை கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஆபாஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என  சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் மணிகண்டனை  போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |