Categories
மாநில செய்திகள்

மக்களே….! ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. ஜூன் 11இல் சிறப்பு முகாம்…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

குடும்ப அட்டையில் உள்ள பிழையைத் திருத்த ஜூன் 11 ஆம் தேதியான சனிக்கிழமை சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு ஜூன் 11ஆம் தேதி சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “குடும்ப அட்டை திருத்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை தொடர்பாக ஏதாவது புகார்கள் இருந்தாலும் இந்த முகாமில் தெரிவிக்கலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |