சென்ற சில வருடங்களாகவே அமெரிக்கா முழுதும் துப்பாக்கி வன்முறையானது அதிகமாகி வருகிறது. அதாவது தொடர்ச்சியாக பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்மித்ஸ்பர்க்கிலுள்ள மேரிலாண்ட் நகரத்தில் உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். வடக்கு மேரிலாண்டிலுள்ள கொலம்பியா இயந்திரத் தொழிற்சாலை என கூறப்படும் உற்பத்தி நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பால்டிமோர் நகரில் இருந்து 75 மைல் தொலைவிலுள்ள ஸ்மித்ஸ்பர்க்கில் கொலம்பியா இயந்திரத் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை என வாஷிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்ற சில வாரங்களில் நியூயார்க், டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் நடந்த பல்வேறு உயர்மட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் துப்பாக்கி வன்முறைச் சட்டங்களை கடுமையாக்குவதற்காக குரலெழுப்ப வழிவகுத்தது. இந்த வருடத்தில் இதுவரையிலும் அமெரிக்கா குறைந்தது 110 பெரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் இந்த துப்பாக்கிசூடு சம்பவங்கள் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.