நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணத்தில் இயக்குனர் அட்லீ கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் இன்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய் என பலர் கலந்து கொண்டார்கள்.
இயக்குனர் அட்லீயும் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாகவே இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். அட்லீ நயன்தாராவை தன் சொந்த அக்காவே எண்ணுகின்றார். மேலும் தான் பாலிவுட் செல்லும் போது கூட நயன்தாராவையும் அழைத்துச் சென்றுள்ளார். ஜாவான் என்கின்ற திரைப்படத்தை ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கும் பொழுது கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார்.