இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற ஜூன் 25ஆம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 776 எம்பிகள், 4,033 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
Categories
BREAKING: அடுத்த குடியரசுத்தலைவர் யார்?…. தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு….!!!
