Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவுன்சிலரை காரில் கடத்தி 40 பவுன் நகை பறிப்பு…. 9 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!!!

கவுன்சிலரை காரில் கடத்தி சென்று 40 பவுன் தங்க நகைகளை பறித்த 9 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அடுத்துள்ள தலைவன் கோட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துப்பாண்டியன் என்பவருடைய மகன் 36 வயதுடைய விஜய பாண்டியன். இவர் நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருக்கின்றார். மேலும் வாசுதேவநல்லூர் ஊராட்சியில் தலைவன்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். இவரிடம் பணம் கேட்டு சிலர் அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். ஆனால் இவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் 5-ம் தேதி இரவு 10 மணி அளவில் விஜய் பாண்டியன் தலைவன் கோட்டையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு காரில் சென்றார்.

அப்போது காரை வாசுதேவநல்லூரில் வசித்த ஓட்டுநர் செல்வகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சங்கரன்கோவில் புளியங்குடி சாலையில் செல்லும்போது திடீரென்று 3 பைக்குகளில் வந்த மலையடிகுறிச்சியில் வசித்த வெள்ளத்துரை, சங்கன்திரட்டையில் வசித்த ஆறு என்ற ஆறுமுகம், கருப்பா, சிவா உள்ளிட்ட 8 பேர் சேர்ந்த கும்பல் காரை வழிமறித்து செல்வகுமார் இறக்கிவிட்டு விட்டு அதே காரில் விஜய் பாண்டியனை நடுவக்குறிச்சி கிராமம் அருகில் கடத்திச் சென்றார்கள். மேலும் அவரிடம் ரூபாய் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். வீட்டிலிருந்து உடனடியாக பணம் வந்து கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று தெரிவித்தார்கள்.

மேலும் விஜய் பாண்டியனிடமிருந்து ரூ 15 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட 40 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டார்கள். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். அதேசமயம் அந்த சாலையில் காவல்துறையினர் ரோந்து வாகனம் வரவே அவரை அங்கேயே விட்டு விட்டு தப்பித்து ஓடி  விட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து விஜய் பாண்டியன் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

உடனே புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விஜய் பாண்டியனின் கார் ஓட்டுநரான செல்வகுமார் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் தலைமறைவாக இருக்கின்ற ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் 8 பேர் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |