Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருக்கு கொரோனா தொற்று….. டுவிட் பதிவு….!!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து. அதிகாலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் லேசாக இருந்தது என்பதை நான் நன்றாக உணர்கிறேன். அதிகம் பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற அமர்வில் மலரின் கலந்து கொண்டதாகவும் மாலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சரவை கட்சிகளின் பாராம்பரிய கோடையை கொண்டாட நடத்தினார் என்றும் தேசிய ஒலிபரப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பிரதமரின் அட்டவணையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவசர சட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அனைத்து கட்சி கூட்டம் நேற்று பிற்பகல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.

Categories

Tech |