கிணற்றில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலையோரத்தில் விவசாயிக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நேற்று காலை இறந்த நிலையில் புள்ளிமான் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மான் வழிதவறி வந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம். இறந்து கிடந்தது இரண்டு வயதுடைய ஆண் மான் என தெரிவித்துள்ளனர்.