Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருவிழாவிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் பரமசிவம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவம் மையிட்டான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பரமசிவம் திருமங்கலம் நோக்கி சென்றார். இவர் கள்ளிக்குடி நான்குவழி சாலையில் சென்ற போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் பரமசிவத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவத்தை வாகன ஓட்டிகள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |