வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலக்கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கமலகண்ணன் திடீரென மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கொம்பன், ரேணுகாதேவி ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.