டெல்லி மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் ரூபாய் 2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்கநாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதற்கிடையில் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நேற்று சத்யேந்திரஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சூழ்நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை அமலாக்கத்துறை வெளியிட்டு இருக்கிறது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பண பரிவர்தனை பற்றிய வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே நேற்று ஒரே நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அமைச்சர் வீட்டில் இத்தனை கோடி ரூபாய் மற்றும் இத்தனை கிலோ தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்கில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.