Categories
தேசிய செய்திகள்

“மனைவிக்கு கிடைத்த அரசு வேலை” பிடிக்காத கணவன் செய்த கொடூரம்….!!!!

மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஷேர் முகமது, ரேணு காதுன் தம்பதி. ரேணு காதுன் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் கணவர் ஷேர் முகமது அரசு வேலை வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் ரேணுகாதுன் கணவன் பேச்சைக் கேட்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை வெட்டியுள்ளார். பிறகு அவரே மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின்முரணாக பேசியுள்ளார்.
மேலும் திடீரென அவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகியுள்ளார். பிறகு உடனே மருத்துவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸாரிடம் நடந்தவற்றை ரேணு காதுன் தெரிவித்துள்ளார்.

வேலையில்லாத ஷேர் முகமது, மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேருவதை தடுக்கவே அவரது கையை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷேர் முகமதுவை தேடி வருகின்றனர்.

Categories

Tech |