Categories
தேசிய செய்திகள்

கடும் வெப்பம் எதிரொலி: ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடும் வெப்பம் எதிரொலி காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜனமணி தெரிவித்ததாவது: “வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம்.

டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் சில பகுதிகளில் ஜூன் 4ஆம் தேதி முதல் கடும் வெப்பம் நிலவி வருகிறது. சாதாரணமாக 44 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் காணப்படுகின்றது. இன்னும் நான்கு நாட்களுக்கு வெப்பம் மிக கடுமையாக இருப்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதனால் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |