நைஜீரியாவின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலிருக்கும் ஓவோ என்னும் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்தது. அதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
மேலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 50 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.