வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மணிகண்டன்-மலர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரவண பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். இந்த விபத்தில் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.