தமிழகம் முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக வேதரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், இராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர் மாவட்ட எஸ்பிக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கரூர் எஸ்பியாக சுந்தரவதனம், மதுரை எஸ்பியாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன், திருவாரூர் எஸ்.பி ஆக சுரேஷ் குமார், திருவள்ளூர் எஸ்பி ஆக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை எஸ்பியாக கார்த்திகேயன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக வருண்குமார் ராமநாதபுரம் எஸ்பி ஆக தங்கதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மத்திய மண்டல ஐ.ஜி ஆக சந்தோஷ் குமார், மதுரை (வடக்கு) துணை ஆணையராக மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை ஆணையராக விஜயகுமார்,
லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பியாக முத்தரசு, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக ராமர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.