Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… “அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க”… பிரான்ஸ் பரிந்துரை…!!!!!!!

குரங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.

உலக அளவில் குரங்கு நோய் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் 51 பேருக்கு  குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் 22 முதல் 63 வயதிற்குட்பட்ட ஆண்கள் எனவும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தலை வலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்ன அம்மை போன்ற சொறி  மூலம் வெளிப்படுகின்றது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி இந்த நோய் பொதுவாக 2 முதல் 4 வாரங்களுக்கு பிறகு சரியாகிவிடும் என தெரிவிக்கின்றது. இது தொடர்பாக பிரஞ்சு சுகாதார அமைப்பு கூறும் போது இது போன்ற நோய் தொற்றை  எதிர்பார்க்கவில்லை எனவும் நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் கூறியது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுனர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரான்ஸ் பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |