Categories
உலக செய்திகள்

தொடரும் துப்பாக்கிச் சூடு…. மர்ம நபரின் வெறியாட்டம்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!

கிரேஸ்லேண்ட் கல்லறையில் 
திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டரதில் பலர் காயமடைந்துள்ளனர். 

அமெரிக்கா நாட்டில் விஸ்கான்சின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் பிற்பகல் 2:26 மணிக்கு கிரேஸ்லேண்ட் கல்லறையில்  நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த  துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. இது போன்று அமெரிக்காவில்  கடந்த மாதம் தொடக்கப்பள்ளி மற்றும்  சூப்பர் மார்க்கெட்டில் நடத்தபட்ட மோசமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

Categories

Tech |