நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் நேரடி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வு தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் 2,3,4 ஆம் ஆண்டு இஞ்சினியரிங் மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என்று AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கலந்தாய்வு முடிந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.