Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்பாபு(20) என்ற மகனும் கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய் தனது மகன் மற்றும் மகளுடன் சென்றுள்ளார். நேற்று காலை கிருஷ்ணபிரியா தனது தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணபிரியா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகள் ஊரில் இருப்பவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்களால் கிருஷ்ண பிரியாவை மீட்க இயலவில்லை. இது குறித்து அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி கிருஷ்ணபிரியாவின் உடலை மீட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் கிருஷ்ணபிரியாவின் உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |