இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் நடிப்பில் உருவாகி இருக்கிற திரைப்படம் ‘விக்ரம்’ ஆகும். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகஉள்ளது. இதனால் படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த புரமோஷனுக்காக உலகம் முழுதும் கமல் சுற்றிவருகிறார். இந்நிலையில் அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றபோது, செய்தியாளர் ஒருவர் “விக்ரம்” படத்தின் 3-வது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா..? என கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “விக்ரம் 3” படத்திற்காக முன்பே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என சூர்யாவை மறைமுகமாக தெரிவித்தார்.
அதே சமயத்தில் விஜய் ஒப்புக்கொண்டால் அவரைவைத்து படத்தை தயாரிப்பதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக இருக்கிறது என கூறினார். முன்னதாகவே ராஜ்கமல் பிலிம்ஸ்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படும் சூழ்நிலையில், இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.