Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பைனான்சியர் கடத்தல்…. ரூ 10 லட்சம் பணம் பறித்த கும்பல்… 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

பைனான்சியரை மிரட்டி ரூ பத்து லட்சம் வாங்கிய கும்பலில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தெருவில் வசித்து வருபவர் 44 வயதுடைய வெங்கோபராவ். இவர் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழிலும் பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரை சிலர் சந்தித்து தங்களிடம் நிலம் இருப்பதாக தெரிவித்து அதை விற்க இருப்பதாகவும் கூறினார்கள். அந்த நிலத்தை வாங்க விரும்பிய வெங்கோபாராவ் அவர்களுடன் காரில் சென்றார். அப்போது அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்கள் வெங்கோபராவ்விடம் கத்தியை காட்டி மிரட்டி பெங்களூரில் இருக்கின்ற வன பகுதிக்கு கடத்தி சென்று விட்டார்கள்.

மேலும் ரூ 10 லட்சம் பணம் கொடுத்தால் உயிருடன் விடுவோம். இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டியது. இதனை அடுத்து வெங்கோபராவ் ரூ 10 லட்சம் தொகையை அந்த கும்பலிடம் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் வெங்கோபராவ்வை அஞ்செட்டில் கொண்டு வந்து விட்டார்கள். இந்நிலையில் உயிருக்கு பயந்து கடந்த சில தினங்களாக போலீஸில் புகார் கொடுக்காமல் வெங்கோபராவ் இருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இப்புகாரின் பேரில் அஞ்செட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் ஓசூர் அருகே மிலிபிக்கல் கிராமத்தில் வசித்த 35 வயதுடைய கணேசன், பெங்களூர் ஏரிகோடியில் வசித்த 30 வயதுடைய சக்திவேல், பாண்டுரங்கன் தொட்டியில் வசித்த 28 வயதுடைய சக்தி மற்றும் சிலர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கணேசன், சக்திவேல், சக்தி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மற்ற நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |