ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இங்கு கடந்த 2015 ஆம் வருடம் முதல் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு ராணுவம் திணறி வருகிறது. இந்த நிலையில் புர்கினா பாசோவின் கிழக்கு பகுதியில் கோம்பிங்கா மாகாணத்தின் மட்ஜோரி நகரில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள் அனைத்தையும் சூறையாடி உள்ளனர்.
அதன்பின் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெற்றியும் கொடூர தாக்குதல்களை நடத்தி இருக்கின்றனர். பயங்கரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 50 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.