Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவிய இந்தியாவிற்கு நன்றி…. -இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவிற்கு நன்றி கூறியிருக்கிறார்.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசியல் குழப்பமாக மாறியது. இதனிடையே அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுடன் பேசியிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவி செய்தது. இதற்காக எங்கள் மக்கள் சார்பாக பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். குவாட் மாநாட்டில் இலங்கை நாட்டிற்கு உதவுவது குறித்து முன்மொழிந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |