ஜப்பான் நாட்டின் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் ஆமை புகுந்ததால் விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ஜப்பான் நாட்டில் இருக்கும் நரிடா என்னும் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ஒரு ஆமை புகுந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த விமான நிலயத்திலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையத்திற்கு அருகே ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது.
அங்கிருந்து தான் ஆமை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்டிருந்த அந்த ஆமையை வலை போட்டுப் பிடித்திருக்கிறார்கள்.