Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. ஜூன் 13 முதல்…. திடீர் மாற்றம்….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று வைரஸ் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியது.

அதன்படி பொதுத்தேர்வுகள் நடைபெற்று முதலில் 1 -9 வகுப்பு  மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். பின் 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கை பள்ளி திறப்புக்கு முன்பே தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கல்வித்துறையில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |