தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொருள்களையும் எடை குறிப்பிட்டு பாக்கெட்டுகளில் வழங்கினால் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பாக்கெட்டுகளில் எடை குறிப்பிடப்பட்டு வழங்கப்படும். பயோமெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால் 1967 என்ற எண்ணுக்கும், 18004255901 என்ற எண்ணுக்கும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.