Categories
சினிமா

WOW: இளையராஜா வீட்டில் கிரிக்கெட் ஆடிய ரஜினி….இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் கதை விவாதமானது பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் திரைக் கதையில் மேலும் சிறப்பு சேர்ப்பதற்காக ரஜினி சார்பில் சிலயோசனைகள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதுவார் என தெரிகிறது. இதனிடையில் ரஜினிக்கு சமீபத்திய குடும்பப்பிரச்சினைகள் அவரை சோர்வடையச் செய்து இருந்தது. எனினும் புதுப்பட வேலைகள் அவருக்கு புத்துணர்ச்சியூட்டி அவரை உற்சாகமடைய வைத்துள்ளது. இதுபோன்ற சூழலில் சில ஆண்டுகளுக்கு முன் இமயமலை சென்று திரும்புவதை ரஜினி வழக்கமாக வைத்து இருந்தார். ஏனெனில் அங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக போதனைகள் மற்றும் ஆத்மஞான அமைதி அவரை உற்சாகமான மனநிலைக்கு மாற்றிவைக்கும். ஆனால் தற்போது அவரது உடல்நிலை மாற்றத்துக்குப் பின் இமயமலைக்கு சென்று வருவதை தவிர்த்து வருகிறார்.
அவற்றிற்கு பதில் ஆன்மிக அமுதம் அருந்தும் இடம் எங்காவது கிடைக்குமா..? என ரஜினி ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் அந்த குறைதீர்ந்து விட்டது. அதாவது இசைஞானி இளையராஜாவும், அவரது வீடும்தான் ரஜினியின் ஆன்மிக தாகத்தை தணிக்கும் இடமாக இருக்கின்றன. இதனால் தான் அண்மைகாலத்தில் இளைய ராஜாவை, பலமுறை ரஜினி சந்தித்துப் பேசியிருக்கிறார். மேலும் இங்கு வந்தால் நான் நிம்மதியாக உணர்கிறேன் சாமி என்றும் உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இல்லையே என இளையராஜாவிடமே ரஜினி ஏக்கத்துடன் கேட்டுள்ளார். ஆகவே இளையராஜாவை சந்திப்பது அவருக்கு இமயமலைக்கு சென்று வந்த மன ஆறுதலை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை ஆகும். இருவருக்கும் இடையேயான நட்பு என்பது திரைத் தொழிலைத் தாண்டியது ஆகும்.
எப்போதெல்லாம் இளையராஜாவை சந்திக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ, அப்போது ஒரு போன் செய்து சாமி உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என கேட்டுவிட்டு ரஜினி புறப்பட்டுவிடுவார். அவ்வாறு ஒருநாள் ரஜினி இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு போக ரஜினி வருகையால் வீடே குதூகலமாகி உள்ளது. அப்போது கார்த்திக் ராஜாவின் மகன் யதீஷ்வர் படித்துக்கொண்டிருந்த நேரம் ஆகும். அந்த சமயத்தில் ரஜினியின் புகழ் வெளிச்சம் புரியாத வயது ஆகும். தனிமையில் இளையராஜா மற்றும் ரஜினி பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கிள் என்னுடன் கிரிக்கெட்விளையாட வர்றீங்களா..? என யதீஷ்வர் கேட்டார்.
அதற்கு இளையராஜா ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய்விட்டார். டேய் அவரு யாரு.. அவரை உன்கூட விளையாடக்கூப்பிடுற என செல்லமாய் பேரனை அதட்டல் போட்டுள்ளார்.  உடனடியாக பக்கத்தில் இருந்த ரஜினி, சாமி விடுங்க குழந்தை தானே என சொல்லியபடியே இதோ வர்றேன் கண்ணா என்று துள்ளிக்குதித்து ஓடியிருக்கிறார். அடுத்ததாக ரஜினி பந்துவீச, யதீஷ்வர் மட்டையை வீசி விளையாட என இவ்வாறு பொழுது கழிந்துள்ளது. அப்போது இளையராஜா அவரகள் விளையாடுவதை புல்வெளியில் நின்றபடி ரசித்து மகிழ்ந்திருக்கிறார். எனவே ரஜினிக்கும், இளையராஜாவுக்கும் இருக்கும் இந்த ஆத்மார்த்தமான ஆன்மிக நட்பு அகல் விளக்கும் ஒளியும்போல ஒன்றைவிட்டு ஒன்று எப்போதும் நீங்காது இணைந்தே இருக்கும்.

Categories

Tech |