Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இளையாவயல் கிராமத்தில் விவசாயியான பெருமாள்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெருமாள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் தனது வீட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |