அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் பரமசிவன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து பரமசிவன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பரமசிவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.