சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொற்று பரவியுள்ளது.
இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.