கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் சாலையில் மாநகராட்சி ஜெயபிரகாஷ் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், கணித ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியர் செல்வத்திற்கு ஆதரவாக அருகில் உள்ள அரசு பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ராஜலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. பொதுமக்களிடையே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதற்காக ஆசிரியர்கள் விஜயகுமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் கேட்ட போது அந்த பள்ளியை தொடர்புகொண்டு கேளுங்கள் என்று கூறினார். மேலும் நியூஸ் சொல்ல வாய்ப்பில்லை என்று இணைப்பை துண்டித்துக் கொண்டார்.