தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என சற்று முன் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதையடுத்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 2022-2023 கல்வியாண்டில் 10,11,12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மூன்றாம் தேதியும்,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும் தொடங்கும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் கல்வியாண்டில் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.