Categories
மாநில செய்திகள்

தீராத கடன் தொல்லை!…. முட்புதரில் கிடந்த பெற்றோர் சடலங்கள்…. விரக்தியில் பிள்ளைகள் செய்த காரியம்….!!!!

அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் சாலை கிராமத்திலுள்ள சாலையோர முட்புதரில் ஒரு ஆண் மற்றும் பெண் உடல்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்படி அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆய்வாளர் சேதுபதி மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி மாணிக்கம்(52), அவரது மனைவி ராணி(47) என்பது தெரியவந்தது. இந்த தம்பதியினருக்கு சசிகலா என்ற மகளும், பெருமாள் என்ற மகனும் இருப்பது தெரியவந்தது. இதில் தந்தை மாணிக்கத்துக்கு கடும் கடன் தொல்லை இருந்துள்ளது.

இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணம்கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்ட தம்பதியினரை பின், தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போது இருவரும் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் இருவரின் உடலையும் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கு குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையில் பெற்றோரின் உடலை பார்ப்பதற்காக காஞ்சிபுரத்திலிருந்து மகள் சசிகலா, மகன் பெருமாள் போன்றோர் நேற்று பிற்பகல் அரக்கோணம் வந்துள்ளனர். அதன்பின் பிள்ளைகள் இருவரும் பெற்றோரை இழந்த விரக்தியில் விஷம் குடித்துவிட்டு சாலை கிராமத்துக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சாலை கிராமத்தில் இறங்கிய இருவரும் நடந்து செல்லும்போது திடீரென்று மயக்கமடைந்து விழுந்தனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |