Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! “முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டம்”…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு உதவுவதற்கு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டுகாலம் ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சரின் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

முதலமைச்சரின் இந்தத் திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கு http://www.bim.edu/Tncmpfhttps என்ற இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |