பூமியில் டைனோசர்கள் என்ற ஒரு வகை உயிரினம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அவற்றில் நிலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் காலகட்டத்தில் உருவில் பெரிய பறக்கக்கூடிய டைனோசர்கள் இருந்து உள்ளன அவை டேரோசார் என அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிற பள்ளி பேருந்து ஒன்றை போன்று 30 அடி நீளத்தில் பெரிய உருவம் கொண்ட அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அர்ஜென்டினாவின் மேற்கே மென்டோசா மாகாணத்தில் ஆன்டிஸ் மலைகள் உள்ளன. இதில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு புதிய படிவம் ஒன்று கிடைத்துள்ளது.
அங்கிருந்த பாறைகளில் கிடைத்த சோதனை மாதிரியில் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் பொருளாக படிந்திருந்த டெரோசாரின் மீதங்களை கண்டறிந்துள்ளனர். இவை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு முன் குறுங்கோள்கள் எனப்படும் பெரிய வகை பாறைகள் பூமி மீது மோதி பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியது. இதனால் அதற்கு 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூமியின் 4 இல் 3 பங்கு உயிரினங்கள் அழிந்து போனது. அதற்கு முன்பு இந்த வகையில் டெரோசர்கள் வாழ்ந்திருக்க கூடும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புதைபொருளின் பெரிய எலும்புகள் பெரிய டெரோசார் வகையை சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தென்னாப்பிரிக்காவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டெரோசார்களின் மிகப்பெரிய புதைபொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.