சடலமாக மீட்கப்பட்ட நபரின் விவரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலகுளம் விநாயகர் நகர் பகுதியில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்கு அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.