Categories
உலக செய்திகள்

விருது வழங்கும் நிகழ்ச்சியில்…. திடீர் துப்பாக்கிச்சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மர்ம நபர் நடத்திய திடீர்  துப்பாக்கிச்சட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். 

அமெரிக்கா நாட்டில் தெற்கு கலிபோர்னியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென   மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது நெரிசலான அறையில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

Categories

Tech |