Categories
மாநில செய்திகள்

“என் மகளை எப்படி உன் பையன் கல்யாணம் பண்ணலாம்”…. மருமகனின் தாயை வெட்டி வீசிய தந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மணமகனின் அம்மாவை மணமகளின் தந்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவியா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பெண்ணின் தந்தை கண்ணாயிரம் மணமகனின் தாய் ராக்கு என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் மருமகனின் தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .

Categories

Tech |