தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக குடியிருப்புக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அரிகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் அனல் மின் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனல்மின் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனல் மின் நிலையம் முழுவதும் அரிகிருஷ்ணனை தேடியுள்ளனர். அப்போது அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் அரிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.