நீதிபதி ஆனந்தன் வாலிபர் ஒருவருக்கு 17 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், சடையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஆராமிர்தம். இவருடைய மகன் 20 வயதுடைய மாரிமுத்து. இவர் கடந்த 2018 -ஆம் வருடம் அக்டோபர் 13ஆம் தேதி அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் 14-ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு வழங்கினார். சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக மாரிமுத்துவிற்கு 10 வருடம் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தில் 7 வருட சிறை தண்டனையும் என ஆக மொத்தம் 17 வருடம் சிறை தண்டனையும், ரூ 20,000 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து மாரிமுத்துவை சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.